தாது மணல் தொழிலுக்கு எதிராக வேண்டும் என்றே தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சில நிழல் உலக மணல் மாபியாக்களால் அரசின் ஆதரவோடு செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு லோடு மணலை ரூபாய் 700 என நாங்கள் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு அரசுக்கு 89 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது என மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது பொதுப்பணித்துறை என்ற பெயரில் முன்பு சசிகலாவின் உறவினரான திவாகரன் மற்றும் அவரது கூட்டத்தால் ஆற்று மணல் சூறையாடப்பட்டது. தற்போது இது போல் நிழல் உலக அரசு தாதாக்களால் ஆற்று மணல் சூறையாடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 200 நாட்கள் மட்டும் ஆற்று மணல் எடுக்கப்பட்டால் குறைந்த பட்சம் வருடத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆற்றில் இருந்து சுரண்டப்படுகிறது. அப்படியானால் வருடம் முழுவதும் ஆற்று மணல் எடுக்கப்படும் போது வருடத்திற்கு 40000 கோடி ரூபாய் சுரண்டப்படுகிறது அல்லவா? இது வெளியே தெரியாமல் இருக்க சில ஊடகங்களுக்கு மாமூல் கொடுத்து பொது மக்கள் இதனை பற்றி விழிப்புணர்வு அடையாமல் இருப்பதற்காக பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்தை திசை திருப்ப அரசு அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் தான் தாது மணல் கொள்ளை என்பது. இதோ ஆற்று மணலில் எவ்வளவு கொள்ளை என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்படுகிறது.
Tag Archives: vaikundarajan
ஸ்டெர்லைட் குறைபாடுகளை சரி செய்யாமல் திசை திருப்புவது நியாயமா?
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஆனால் விவி டைட்டானியத்திற்கு எதிராக என்று ஒரு வீடியோ பரப்ப விடப்பட்டது. நாங்கள் எந்த தொழிலுக்கு எதிரானவர்கள் அல்ல. எல்லா தொழிலும் வேண்டும். தொழில் வளர்ச்சி இல்லை என்றால் நாகரீக உலகத்தில் மனித சமுதாயம் வசதியாக வாழ முடியாது. சில தொழில்களில் சில நேரங்களில் மனித கவனத்தையும் மீறி சில தவறுகள், குறைபாடுகள் நிகழலாம். அவை சரி செய்யப்பட வேண்டும். மாறாக அந்த தொழிலே முழுவதும் நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களுக்கு உடன்பாடு இல்லாதது. ஏனென்றால் இதே போல் அரசியல் காரணங்களால் தாது மணல் தொழில் நிறுத்தப்பட்டு சுமார் 50000 குடும்பங்கள் பல வருடங்களாக சொல்லொன்னா துயரத்தை அனுபவித்து வருகிறோம். தற்போது விவி டைட்டானியத்தால் தான் சுற்றுச்சூழல் பாதிப்பு என ஒரு வீடியோ வெளியிடப் பட்டது. அதற்கான பகுப்பாய்வு அறிக்கைகளும் வெளியிடப் பட்டன. இதில் மிக கவனிக்க வேண்டியது ஏப்ரல் 21-ல் மாதிரி எடுத்து ஏப்ரல் 22-ல் ஆய்வு செய்து கொடுத்து ஏப்ரல் 28-ல் பகுப்பாய்வு அறிக்கை பெற்று அதனை ஜீன் 2-ல் அதாவது சுமார் ஒன்றேகால் மாதம் கழித்து வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அதற்கு காரணம் அந்த பகுப்பாய்வு அறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள்; அதாவது குரோமியம், காப்பர், ஈயம் முதலியவை அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதால் தான் அவற்றை வெளியிடாமல் காலம் தாழ்த்தினார்கள். தற்போது கைமீறி அந்த ஆலை மூடப்பட்டதால் அருகில் உள்ள நிறுவனத்தின் மீது அபாண்டமான பழியோடு வீடியோ வெளியாகி உள்ளது.
நாட்டில் நடக்கும் ஆற்று மணல் கொள்ளையை பொது மக்களும் மற்றவர்களும் தெரியாமல் இருப்பதற்காக செயற்கையாக தாது மணல் கொள்ளை என்ற பொய் புகாரை உருவாக்கி அந்த தொழிலை நிறுத்தி உள்ள நிலையில் அதே நிறுவனத்தை நோக்கி திருப்பி விட்டால் அது எதிர்ப்பை திசை திருப்பும் என நினைத்து யாரோ இந்த செய்தியை பரப்பி விட்டார்கள். தொழில் போட்டியினாலும் அந்நிய நிறுவன போட்டியினாலும் குடும்ப பகையினாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக தாது மணல் தொழில் இதனாலும் பாதிக்கப்படக் கூடாது. எனவே இது பற்றிய விபரங்களை ஆராய்ந்தோம். இந்திய உச்சநீதிமன்ற உத்தரவு படி 2011-ல் இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை மத்திய அரசின் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகம் (NEERI) ஏற்கனவே ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவும் பிறப்பித்துள்ளது. 2011-ல் பிறப்பிக்கப் பட்ட அந்த உத்தரவிலேயே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகளில் குரோமியம், காப்பர், ஈயம் போன்றவை அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிகமாக இருப்பதை உச்சநீதிமன்றமே 53-வது பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளது. டைட்டானியம் என்பது இல்மனைட் தாதுவில் இருந்து சல்பிரிக் ஆசிட்டை உபயோகித்து டைட்டானியத்தை பிரிப்பது. இதில் குரோமியம் காப்பர், ஈயம் போன்றவை வரவே செய்யாது. நண்பரின் வீடியோவில் ஈயம் போன்றவை கூடுதல் இருப்பது அவரது மாதிரி பகுப்பாய்விலேயே தெரிகிறது. எனவே இந்த கழிவிற்கு காரணம் ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியது போல் ஸ்டெர்லைட் நிறுவன கழிவு தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும். மேற்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை https://www.elaw.org/system/files/sterlite.v.india_.pdf இணைப்பில் பார்க்கலாம். தொடர்புடைய தீர்ப்பின் பக்கம் 53 கீழே கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பொய் புகாரால் பாதிக்கப் பட்ட ஒரு தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு திசை திருப்பும் நாடகம் நடப்பதால் இவற்றை பதியவும் வெளி கொணரவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை தயவு செய்து தவறுகளை திருத்துங்கள். உள்நோக்கத்தோடு ஏற்கனவே பாதிக்கப் பட்ட நிறுவனங்களை தாக்கி அழிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இந்த தாது மணல் தொழில் இந்திய அரசுக்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தொழில் என்பதையும் எந்த தவறுகளும் நடைபெற வில்லை என்பதையும் எங்களது இணைய தளத்திலும், http://www.beachminerals.org இணைய தளத்திலும் உள்ள பதிவுகளின் மூலம் பார்க்கலாம். அவற்றை பார்த்து எந்த சந்தேகம் என்றாலும் அதனை நிவர்த்தி செய்யவும் நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் பிளஸ் டு முடிக்கிறார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள், 3 லட்சம் பட்டதாரிகள், வெளிநாட்டில் படிக்கும் பட்டதாரிகள் ஒரு லட்சம் என உருவாகிறார்கள். எனவே ஆண்டுக்கு ஆண்டு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக பொய் புகார்களை கூறி தொழில்களை கெடுப்பதை எங்கள் தொழிலாளர் சமுதாயம் எந்த நிலையிலும் ஊக்குவிக்காது.
இந்தியாவில் தொழில் செய்வது தான் எத்தனை கடினம்??
அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வந்த தாது மணல் தொழில் சில நிழல் உலக அரசால் கபளிகரம் செய்வதற்காக பொய்யான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டு பலமுனை தாக்குதலுக்கு அதில் ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டன. வேண்டும் என்றே உண்மை தெரிந்து சில ஊடகங்களும், உண்மை தெரியாமல் நல்லெண்ணத்தில் சில ஊடகங்களும் இந்த தொழிலுக்கு எதிராக எழுதி வருகின்றன. எல்லாம் நீதித்துறை அச்சப்படுத்துவதற்கு ஒரு நடவடிக்கை. அரசின் வேண்டுகோள் படி அறிக்கை கொடுத்த அதிகாரிகளும் ஒரு படத்தை 64 துண்டுகளாக மாற்றி பசில் என சரி செய்ய கொடுப்பது போல் அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் குழப்புவதற்காக அறிக்கைகளை வேண்டும் என்றே சரியாக கொடுக்கவில்லை. இதில் முக்கியம் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் ஏற்றுமதி கனிமங்களில் தான் மோனசைட் அளவுக்கு அதிகமாக இருந்தது என்ற விபரத்தை வேண்டும் என்றே அதிகாரிகள் மறைத்து விட்டு சில இனங்களில்; கூடுதல் கொடுத்து விட்டார்கள். இதன் அடிப்படையில் இந்து தமிழ் பத்திரிக்கையில் 22.5.18 ஒரு செய்தி மிகைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது. அதற்கு நம் தொழிலாளர் சங்கம் சார்பாக ஒரு பதில் அனுப்பப் பட்டுள்ளது. இது இந்து நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தால் நிச்சயம் இதில் நல்ல முடிவு எடுப்பார்கள். எனவே நமது சங்கத்தில் இருந்து இந்து பத்திரிக்கையின் இயக்குனர்களை சந்திக்க கால ஒதுக்கி தரவும் கேட்க முடிவு செய்துள்ளோம். அந்த பத்திரிக்கைக்கு அனுப்பிய பதில் அனைத்து உறுப்பினர்களும் தெரிந்;து கொள்ள கீழே வெளியிடப் பட்டுள்ளது.
***********
From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-05-23 10:28 GMT+05:30
Subject: Clarification regarding “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்”
To: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in
அன்புடையீர்,
தனியார் தாதுமணல் சுரங்க பகுதியில் பாதிப்பு இல்லை.
தனியார் தாது மணல் சுரங்க பகுதி மற்றும் தொழிற்சாலை உள்ள பகுதிகளில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதால் எந்த நோயும் கிடையாது. மாறாக மத்திய அரசு நடத்தும் தாது மணல் தொழிற்சாலையால் நோய் பாதிப்பு என பத்திரிக்கைகள் செய்தி வெளியிடுகிறது. இதில் இருந்து விதிமுறைகளை யார் சரியாக கடைபிடித்து குவாரி செய்கிறார்கள் என்பது தெரியவில்லையா?
ஊடகதுறையில் நேர்மையை கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சினுக்கு வாழ்த்துக்கள்.
வழக்கம் போல் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதை தெரிந்து, நீதித்துறையை எதிராக்குவதற்காக பொய் செய்திகளை வெளியிடும் கும்பல் வழக்கு விசாரணைக்கு வரும் 19-ம் தேதி கேரளா இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் விவி மினரல் நிறுவனம் கேரளாவில் இல்லீகல் மைனிங் செய்ததாக அங்குள்ள ஒரு காவல் அதிகாரி அறிக்கை செய்துள்ளார் என ஒரு தலைபட்சமாக ஒரு செய்தியை வெளியிட வைத்தார்கள். இது பற்றி தெரிந்த உடன் உண்மை நிலவரத்தை திரு. எஸ்.வைகுண்டராஜன் மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தி அந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது. அதனை செயல்படுத்தக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விபரத்தையும் அவ்வாறு பொய்யாக அறிக்கை தயாரித்து கொடுத்த திரு.உன்னிராஜன் என்ற அதிகாரி மீது குற்ற நடவடிக்கையும், துறை நடவடிக்கையும் எடுக்க ஆளுனர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிய விபரத்தையும் ஆளுனரின் கடிதத்தின் அடிப்படையில் கேரளா தலைமை செயலர் அந்த அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்த விபரத்தையும் ஆதார ஆவணங்களோடு தெரியப்படுத்தினார். அவற்றை பரிசீலித்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சின் 21.03.2018-லேயே இந்த விளக்கத்தை அவர்களது 6-வது பக்கத்தில் வெளியிட்டதோடு ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதற்கு வருந்துகிறோம் என பெருந்தன்மையோடு குறிப்பிட்டுள்ளார்கள். ஜனநாயகத்தை காக்கும் 4-வது தூணான ஊடக துறையில் இன்னும் நேர்மையை கைவிடாமல் கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்துக்கள்.
Source : http://epaper.newindianexpress.com/1587027/The-New-Indian-Express-Kochi/21032018#page/6/1
ஒரு தாது மணல் தொழிற்சாலை நிறுத்தத்தால் மட்டும் தொழிலாளர்களின் சம்பளம் ரூபாய் 40 கோடி இழப்பு
தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கூடன்குளத்திலும், இஸ்ரோவிலும் தமிழர்கள் தவிர பிற மாநிலத்தவர்களே அதிகம் வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் அதிகம் வேலை பார்க்கும் தொழில் தாது மணல் தொழில் மட்டுமே. ஆற்று மணலை போல் கையகப்படுத்தி கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தில் முன்பு ஆற்று மணல் மீது குற்றச்சாட்டு கூறி அரசு கொள்ளை அடிக்க எடுத்தது போல் தாது மணலுக்கு திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கிடையில் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் மணவாளக்குறிச்சி தாது மணல் தொழிற்சாலையை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிற்சாலை இயங்காமல் சம்பளம் கொடுத்தால் 40 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என இந்திய அரசு நிறுவனம் மத்திய தொழிலாளர் நல வாரியத்திடம் முறையிட்டு இது பற்றி விசாரணை கடந்த 09.03.2018 அன்று டெல்லியில் நடந்தது. அதற்கு அந்த தொழிற்சாலையின் மினரல் ஒர்க்கர்ஸ் யூனியன் கொடுத்த மனுவிலும் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தாது மணல் தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தாது மணல் தொழிலாளர்கள் இந்திய அரசுக்கு அனுப்பிய மனுவை விசாரித்த இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் தாது மணல் தொழிற்சாலைகளை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே விசாரித்து இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்து விட்டார். அவர் தொழிற்சாலை நிறுத்தத்தால் இந்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிப்பு என்றும் தொழிலாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு என்றும் மாநில அரசுக்கும் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு தோறும் இழப்பீடு ஏற்படுகிறது என்றும் அறிக்கை சமர்பித்துள்ளார். ஆனால் ஆற்று மணல் போல் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ள அரசியல்வாதிகள் எப்படி கொள்ளை கூட்ட உறவினர்களை ஆணையராக நியமித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், இறக்குமதி மணலையும் விற்க கூடாது என தடுத்தார்களோ அப்படியே இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் அறிக்கை சமர்பித்த பின்பும் கூட தொழிலாளர்களின் நலனில் எந்த அக்கரையும் செலுத்தாமல் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா தாது மணல் தொழிற்சாலைகளும் இயங்க வேண்டும். ஏராளமான தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கும் அரசியல் கட்சிகளை தொழிலாளர் சமுதாயம் ஆதாரிக்க வேண்டும். இதனை பொது மக்களிடமும் தொழிளாளர்களிடமும் பரப்புவோம்.
தாது மணலில் அணு கனிமம் – கதிரியக்கம் என்ற அபாண்ட குற்றச்சாட்டு- உண்மை நிலை
அன்னிய சக்திகள் இந்திய தாது மணல் உற்பத்தியாளர்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் சதி திட்டம் செய்து அவர்களுக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுகளை பெரும் செலவு செய்து கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். விளைவு இதனால் இந்திய அரசுக்கு பெறுத்த நட்டம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, தாது மணல் கனிமங்கள் காற்றில் அடித்து செல்லப்பட்டும், கடலில் இழுத்து செல்லப்பட்டும் வீணாகின்றன. மேலும் கடல் உள்ளே இழுத்து செல்லப்படும் கனிமங்கள் பக்கத்து நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்தியாவின் கடல் வளம் இந்திய மீனவர்களுக்கு மீன் படி உரிமையை மறுக்கும் இலங்கையால் அனுபவிக்கப்படுகிறது.
அதிகாரிகளையும் நீதித்துறையையும் மிரட்டுவதற்கு மிகப் பெரிய குற்றச்சாட்டான கதிரிக்கம் என்ற ஒரு பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் கதிரியக்கத்திற்கும் தாது மணல் குவாரி அல்லது சுத்தப்படுத்துதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாது மணல் குவாரி செய்யும் போது அரை சதவீதத்திற்கும் குறைவாக மோனசைட் என்னும் ஒரு கனிமம் கிடைக்கும். இந்த மோனசைட் சாதாரண மணலிலும், கல்லிலும், கிரானைட் உட்பட பூமியின் எல்லா பகுதியிலும் இயற்கையாகவே கிடைக்கும். அதுவும் சாதாரண மணல் மற்றும், கல், கிரானைட் பாறை முதலியவற்றில் கிடைப்பவை தாது மணலில் கிடைப்பதை விட கூடுதலான அளவு. இதனால் எந்த பாதிப்பும் யாருக்கும் கிடையாது. இதனால் பாதிக்கப் பட்டதாக கூறுவது எல்லாம் இட்டு கட்டிய கதை. உலகிலேயே அதிகமான மோனசைட் கிடைக்கும் இடம் மணவாளக்குறிச்சி. அங்கு இந்திய அரசு நிறுவனம் தான் குவாரி செய்து வருகிறது. அந்த பஞ்சாயத்து முழுவதும் மீனவர்கள் நிறைந்த பஞ்சாயத்து. மீனவ சமுதாய பெண் ஒருவர் தான் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இந்த உலகிலேயே அதிக மோனசைட் உள்ள மணவாளக்குறிச்சியில் தான் மோனசைட்டையும் குவாரி செய்து பிரித்து எடுக்கிறார்கள். அங்கு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கடந்த 50 வருடங்களாக தலைமுறை தலைமுறையாக அங்கு வசதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறுவதை கேட்கலாம் ( )
இத்தொழிலில்; ஈடுபட்டுள்ள எந்த தொழிலாளியோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ அல்லது இந்த தொழிற்சாலைகளை ஒட்டி உள்ள மக்களோ கதிர்வீச்சு நோய் எதிலும் பாதிக்கப்படவில்லை. மாறாக இதனை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த ஊரில் ஒருவருக்கு இந்த நோய், இந்த ஊரில் ஒருவருக்கு அந்த நோய் என இட்டு கட்டி எழுதுவார்கள். எந்த ஊரில் தான் யாருக்கு நோய் இல்லை. உலகம் முழுவதும் கேன்சர் உள்ளது. உலகம் முழுவதும் சிறுநீரக பாதிப்பு உள்ளது. இது சிறுவயதில் பள்ளிக்கு செல்வதற்கு தலைவலி, வயிற்று வலி என்ற ஆசிரியரால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தை கூறி பள்ளியை ஏமாற்றுவது போன்றது. இருப்பினும் தொழிளாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கதிரியக்கம் என்ற பொய் பிரச்சாரம் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக இருதயம் என்னும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த விஞ்ஞானி “நான் இந்தியன்” என்ற பெயரில் கதிரிக்கம் பற்றி பதிவு செய்துள்ளவைகளை கீழே பதிவிட்டுள்ளோம்.
கதிரியக்கம் என்றால் என்ன – ஒரு அறிவியல் பார்வை
(நன்றி : http://en.wikipedia.org/wiki/Sievert )