Tag Archives: river sand

ஆற்றுமணல் கொள்ளையை திசைதிருப்ப தாது மணல் கொள்ளை என்று திட்டமிட்ட பிரச்சாரம். இதோ ஆதாரம்

தாது மணல் தொழிலுக்கு எதிராக வேண்டும் என்றே தவறாக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக சில நிழல் உலக மணல் மாபியாக்களால் அரசின் ஆதரவோடு செய்யப்படுகிறது. தமிழக அரசு ஒரு லோடு மணலை ரூபாய் 700 என நாங்கள் விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டு அரசுக்கு 89 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது என மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது பொதுப்பணித்துறை என்ற பெயரில் முன்பு சசிகலாவின் உறவினரான திவாகரன் மற்றும் அவரது கூட்டத்தால் ஆற்று மணல் சூறையாடப்பட்டது. தற்போது இது போல் நிழல் உலக அரசு தாதாக்களால் ஆற்று மணல் சூறையாடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு 200 நாட்கள் மட்டும் ஆற்று மணல் எடுக்கப்பட்டால் குறைந்த பட்சம் வருடத்திற்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆற்றில் இருந்து சுரண்டப்படுகிறது. அப்படியானால் வருடம் முழுவதும் ஆற்று மணல் எடுக்கப்படும் போது வருடத்திற்கு 40000 கோடி ரூபாய் சுரண்டப்படுகிறது அல்லவா? இது வெளியே தெரியாமல் இருக்க சில ஊடகங்களுக்கு மாமூல் கொடுத்து பொது மக்கள் இதனை பற்றி விழிப்புணர்வு அடையாமல் இருப்பதற்காக பொது மக்கள் மற்றும் தன்னார்வலர்களின் கவனத்தை திசை திருப்ப அரசு அதிகாரிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் தான் தாது மணல் கொள்ளை என்பது. இதோ ஆற்று மணலில் எவ்வளவு கொள்ளை என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்படுகிறது.

Link: http://scroll.in/article/815138/tamil-nadus-political-parties-are-making-money-from-sand-worth-a-whopping-rs-20000-crore-a-year