வழக்கம் போல் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதை தெரிந்து, நீதித்துறையை எதிராக்குவதற்காக பொய் செய்திகளை வெளியிடும் கும்பல் வழக்கு விசாரணைக்கு வரும் 19-ம் தேதி கேரளா இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் விவி மினரல் நிறுவனம் கேரளாவில் இல்லீகல் மைனிங் செய்ததாக அங்குள்ள ஒரு காவல் அதிகாரி அறிக்கை செய்துள்ளார் என ஒரு தலைபட்சமாக ஒரு செய்தியை வெளியிட வைத்தார்கள். இது பற்றி தெரிந்த உடன் உண்மை நிலவரத்தை திரு. எஸ்.வைகுண்டராஜன் மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தி அந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது. அதனை செயல்படுத்தக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விபரத்தையும் அவ்வாறு பொய்யாக அறிக்கை தயாரித்து கொடுத்த திரு.உன்னிராஜன் என்ற அதிகாரி மீது குற்ற நடவடிக்கையும், துறை நடவடிக்கையும் எடுக்க ஆளுனர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிய விபரத்தையும் ஆளுனரின் கடிதத்தின் அடிப்படையில் கேரளா தலைமை செயலர் அந்த அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்த விபரத்தையும் ஆதார ஆவணங்களோடு தெரியப்படுத்தினார். அவற்றை பரிசீலித்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சின் 21.03.2018-லேயே இந்த விளக்கத்தை அவர்களது 6-வது பக்கத்தில் வெளியிட்டதோடு ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதற்கு வருந்துகிறோம் என பெருந்தன்மையோடு குறிப்பிட்டுள்ளார்கள். ஜனநாயகத்தை காக்கும் 4-வது தூணான ஊடக துறையில் இன்னும் நேர்மையை கைவிடாமல் கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்துக்கள்.
Source : http://epaper.newindianexpress.com/1587027/The-New-Indian-Express-Kochi/21032018#page/6/1