Tag Archives: #miningbaron

ஊடகதுறையில் நேர்மையை கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சினுக்கு வாழ்த்துக்கள்.

வழக்கம் போல் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதை தெரிந்து, நீதித்துறையை எதிராக்குவதற்காக பொய் செய்திகளை வெளியிடும் கும்பல் வழக்கு விசாரணைக்கு வரும் 19-ம் தேதி கேரளா இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் விவி மினரல் நிறுவனம் கேரளாவில் இல்லீகல் மைனிங் செய்ததாக அங்குள்ள ஒரு காவல் அதிகாரி அறிக்கை செய்துள்ளார் என ஒரு தலைபட்சமாக ஒரு செய்தியை வெளியிட வைத்தார்கள். இது பற்றி தெரிந்த உடன் உண்மை நிலவரத்தை திரு. எஸ்.வைகுண்டராஜன் மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்தி அந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது. அதனை செயல்படுத்தக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விபரத்தையும் அவ்வாறு பொய்யாக அறிக்கை தயாரித்து கொடுத்த திரு.உன்னிராஜன் என்ற அதிகாரி மீது குற்ற நடவடிக்கையும், துறை நடவடிக்கையும் எடுக்க ஆளுனர் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிய விபரத்தையும் ஆளுனரின் கடிதத்தின் அடிப்படையில் கேரளா தலைமை செயலர் அந்த அதிகாரி மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்த விபரத்தையும் ஆதார ஆவணங்களோடு தெரியப்படுத்தினார். அவற்றை பரிசீலித்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கொச்சின் 21.03.2018-லேயே இந்த விளக்கத்தை அவர்களது 6-வது பக்கத்தில் வெளியிட்டதோடு ஒரு தலைபட்சமான அறிக்கையின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதற்கு வருந்துகிறோம் என பெருந்தன்மையோடு குறிப்பிட்டுள்ளார்கள். ஜனநாயகத்தை காக்கும் 4-வது தூணான ஊடக துறையில் இன்னும் நேர்மையை கைவிடாமல் கடைபிடிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்துக்கள்.

Source : http://epaper.newindianexpress.com/1587027/The-New-Indian-Express-Kochi/21032018#page/6/1

 

ஒரு தாது மணல் தொழிற்சாலை நிறுத்தத்தால் மட்டும் தொழிலாளர்களின் சம்பளம் ரூபாய் 40 கோடி இழப்பு

தென்மாவட்டங்களில் பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. கூடன்குளத்திலும், இஸ்ரோவிலும் தமிழர்கள் தவிர பிற மாநிலத்தவர்களே அதிகம் வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் அதிகம் வேலை பார்க்கும் தொழில் தாது மணல் தொழில் மட்டுமே. ஆற்று மணலை போல் கையகப்படுத்தி கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தில் முன்பு ஆற்று மணல் மீது குற்றச்சாட்டு கூறி அரசு கொள்ளை அடிக்க எடுத்தது போல் தாது மணலுக்கு திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கிடையில் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாததால் மணவாளக்குறிச்சி தாது மணல் தொழிற்சாலையை நிறுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிற்சாலை இயங்காமல் சம்பளம் கொடுத்தால் 40 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என இந்திய அரசு நிறுவனம் மத்திய தொழிலாளர் நல வாரியத்திடம் முறையிட்டு இது பற்றி விசாரணை கடந்த 09.03.2018 அன்று டெல்லியில் நடந்தது. அதற்கு அந்த தொழிற்சாலையின் மினரல் ஒர்க்கர்ஸ் யூனியன் கொடுத்த மனுவிலும் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தாது மணல் தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தாது மணல் தொழிலாளர்கள் இந்திய அரசுக்கு அனுப்பிய மனுவை விசாரித்த இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் தாது மணல் தொழிற்சாலைகளை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே விசாரித்து இந்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்து விட்டார். அவர் தொழிற்சாலை நிறுத்தத்தால் இந்திய அரசுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிப்பு என்றும் தொழிலாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு என்றும் மாநில அரசுக்கும் சுமார் 700 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு தோறும் இழப்பீடு ஏற்படுகிறது என்றும் அறிக்கை சமர்பித்துள்ளார். ஆனால் ஆற்று மணல் போல் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் உள்ள அரசியல்வாதிகள் எப்படி கொள்ளை கூட்ட உறவினர்களை ஆணையராக நியமித்து உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், இறக்குமதி மணலையும் விற்க கூடாது என தடுத்தார்களோ அப்படியே இந்திய அரசு தொழிலாளர் நல ஆணையர் அறிக்கை சமர்பித்த பின்பும் கூட தொழிலாளர்களின் நலனில் எந்த அக்கரையும் செலுத்தாமல் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எல்லா தாது மணல் தொழிற்சாலைகளும் இயங்க வேண்டும். ஏராளமான தமிழர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். இதற்கு உறுதுணையாக இருக்கும் அரசியல் கட்சிகளை தொழிலாளர் சமுதாயம் ஆதாரிக்க வேண்டும். இதனை பொது மக்களிடமும் தொழிளாளர்களிடமும் பரப்புவோம்.