Tag Archives: illicit mining

இந்தியாவில் தொழில் செய்வது தான் எத்தனை கடினம்??

அனைத்து அனுமதிகளையும் பெற்று சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வந்த தாது மணல் தொழில் சில நிழல் உலக அரசால் கபளிகரம் செய்வதற்காக பொய்யான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தப்பட்டு பலமுனை தாக்குதலுக்கு அதில் ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டன. வேண்டும் என்றே உண்மை தெரிந்து சில ஊடகங்களும், உண்மை தெரியாமல் நல்லெண்ணத்தில் சில ஊடகங்களும் இந்த தொழிலுக்கு எதிராக எழுதி வருகின்றன. எல்லாம் நீதித்துறை அச்சப்படுத்துவதற்கு ஒரு நடவடிக்கை. அரசின் வேண்டுகோள் படி அறிக்கை கொடுத்த அதிகாரிகளும் ஒரு படத்தை 64 துண்டுகளாக மாற்றி பசில் என சரி செய்ய கொடுப்பது போல் அதிகாரிகளையும் வழக்கறிஞர்களையும் குழப்புவதற்காக அறிக்கைகளை வேண்டும் என்றே சரியாக கொடுக்கவில்லை. இதில் முக்கியம் இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் ஏற்றுமதி கனிமங்களில் தான் மோனசைட் அளவுக்கு அதிகமாக இருந்தது என்ற விபரத்தை வேண்டும் என்றே அதிகாரிகள் மறைத்து விட்டு சில இனங்களில்; கூடுதல் கொடுத்து விட்டார்கள். இதன் அடிப்படையில் இந்து தமிழ் பத்திரிக்கையில் 22.5.18 ஒரு செய்தி மிகைப்படுத்தி எழுதப்பட்டு இருந்தது. அதற்கு நம் தொழிலாளர் சங்கம் சார்பாக ஒரு பதில் அனுப்பப் பட்டுள்ளது. இது இந்து நிறுவனத்தின் உயர் நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தால் நிச்சயம் இதில் நல்ல முடிவு எடுப்பார்கள். எனவே நமது சங்கத்தில் இருந்து இந்து பத்திரிக்கையின் இயக்குனர்களை சந்திக்க கால ஒதுக்கி தரவும் கேட்க முடிவு செய்துள்ளோம். அந்த பத்திரிக்கைக்கு அனுப்பிய பதில் அனைத்து உறுப்பினர்களும் தெரிந்;து கொள்ள கீழே வெளியிடப் பட்டுள்ளது.

***********

From: Southern Mineral Workers Association <sworkersassociation@gmail.com>
Date: 2018-05-23 10:28 GMT+05:30
Subject: Clarification regarding “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்”

To: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in

அன்புடையீர்,

தங்களது 22.5.18 தேதிய பத்திரிக்கையில் “குவித்து வைக்கப்பட்ட தாது மணலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.  இதன் தொடர்ச்சியாக எங்கள் விளக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் மேற்கண்ட அறிக்கையை முழுவதும் படிக்காமல் இந்த கட்டுரையை எழுதி உள்ளீர்கள் என்பதையும் விருவிரு செய்தி கொடுக்க வேண்டும் என்று மிகைப்படுத்தி எழுதி உள்ளதையும் தெரிய முடிகிறது. ஒருவேளை இந்த கட்டுரைதாரரில் யாராவது திருமதி சந்தியா ரவிசங்கரின் கூட்டாளியாகவோ அல்லது பங்குதாரராகவோ இருக்கலாம். அதுவும் இந்த கட்டுரை உண்மைக்கு புறம்பாக வருவதற்கு காரணம்.
முதலில் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் என்பது தாது மணலில் மட்டும் கிடைப்பது அல்ல. அது ஆற்று மணலிலும் கிடைக்கும். பெரும் பகுதியாக கிடைப்பது இரும்பு தாது சுரங்கத்திலும், சுண்ணாம்பு தாது சுரங்கத்திலும் தான். ஆனால் அவற்றிற்கு பணத்திற்காக புகார் எழுதும் பொய்யர் கூட்டம் இல்லாததால் அதை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. மாறாக குடும்ப பகை, தொழில் போட்டி, மாமூல் தரவில்லை என்ற கோபம், விளம்பரம் தரவில்லை என்ற கோபம் ஆகியவற்றிற்காக மிகைப்படுத்தி இவை எழுதப்படுகின்றன.
இது போக இதில் அன்னிய சக்திகளின் கையும் உண்டு. இந்திய உற்பத்தியாளர்களால் தங்களது ஏகபோக வாணிபம் தடை பட்டதை சகித்து கொள்ள முடியாத அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் சில கைக்கூலிகளை கையில் வைத்து தவறாக எழுதுகின்றன.
முதலாவதாக மோனசைட்டில் கிடைக்கும் தோரியம் மற்றும் யுரேனியம் பிளவு படக் கூடியது அல்ல. எனவே அவற்றை எந்த வகைக்கும் உபயோகிக்க முடியாது. உலகத்தில் எந்த நாட்டிலும் மோனசைட்டில் இருந்து கிடைக்கும் தோரியத்தை வைத்து எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தியாவில் இதனை பிளவு பட வைக்க  முடியுமா என்பதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. 2080-ல் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறார்கள். எப்படி கடல் நீரில் இருந்து  பெட்ரோல் தயாரிக்க ஆராய்ச்சி சென்று கொண்டு இருக்கிறதோ அது போல் இது ஒரு ஆராய்ச்சி.
இந்த மோனசைட் கனிமம் இதர கனிமங்களோடு கலந்து இருந்தால் இதர கனிமங்களுமே உபயோகத்திற்கு லாயக்கற்றதாகி விடும். உலக நாடுகளில் மோனசைட் கனிமம் கட்டுப்பாடு எதுவும் இன்றி விலை மலிவாக கிடைப்பதால் அந்நிய நாடுகள் இந்த மோனசைட்டில் இருந்து ரேர் எர்த் தயாரிப்பதற்கு இந்தியாவிடம் கொள்முதல் செய்வதை 2004-லேயே நிறுத்தி விட்டார்கள். இதனை இந்திய பாராளுமன்றத்தில் வினா எண் 420-க்கு பதிலில் மத்திய அமைச்சர் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
தாங்கள் கிடங்குகளில் ஏற்றுமதிக்கு வைக்கப்பட்டுள்ள மணலில் மோனசைட் கனிமம் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆனால் அது இந்திய அரசு நிறுவனமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனத்தின் சரக்கு என்பதை வேண்டும் என்று மறந்தீர்களோ அல்லது தெரியாமல் விட்டீர்களோ தெரியாது. உங்கள் கவனத்திற்கு கீழ்கண்டவற்றையும் கொண்டு வர விழைகிறேன்.
மோனசைட் என்பது இயற்கையாக கிடைக்கும் ஒரு கனிமம். இதில் இத்தனை சதவீதம், அத்தனை சதவீதம் என்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. தங்கள் பார்வைக்கு அணுசக்தி துறையின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மோனசைட் கனிமம் ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற ஒரு எண்ணத்தை நீதித்துறையில் ஏற்படுத்துவதற்காக இந்த திட்டமிட்ட செய்திகள் பரப்பபடுகின்றன. உண்மையில் எல்லா துறைமுகங்களும் விமான நிலையத்தில் உள்ளது போல் லாரியோடு செல்லும் சரக்குகளை ஆய்வு செய்ய ஸ்கேனர் வசதி பொறுத்தப்பட்டுள்ளது. எனவே அவற்றின் வழியாக மோனசைட்டோ அல்லது எந்த கதிரியக்க பொருளுமோ கொண்டு செல்லவோ இறக்குமதி செய்யவோ முடியாது. நாளது தேதி வரை இவ்வாறு எந்த கதிரியக்க பொருளும் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்படவில்லை என்ற விபரத்தை நீங்கள்  http://www.beachminerals.org/tuticorin-port-trust-has-scanner-to-find-out-radioactive-materials-uranium-thorium-monazite-or-other-unwanted-materials-used-for-export-until-now-no-such-materials-found-in-the-export-cargo-tutico/  ல் காணலாம்.
தாங்கள் மற்றும் திருமதி சந்தியா ரவிசங்கர் ஆகியோர் முழுவதும் விவி மினரல் நிறுவனத்தையும் வைகுண்டராஜனையும் குறி வைத்து தாக்குவதை வழக்கமாக கொண்டவர்கள்.
தாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருப்பதாக கூறி உள்ளீர்கள். எது அனுமதிக்கப்பட்ட அளவு? அதற்கான அரசாணை அல்லது அறிவிக்கை எங்கே உள்ளது?
தாங்கள் திருவம்பலாபுரத்தில் மோனசைட் இருப்பு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மை. அவை இதர கனிமங்களை பிரித்த பிறகு அணுசக்தி  துறை  நிபந்தனை படி தனியாக பாதுகாத்து வைக்கப்பட்டு அணுசக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சரால் பதிலாக question No. 2654  தெரியப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் அதனை தெரிவித்தால் பெரிய குற்றச்சாட்டாக பதிய முடியாது என்பதற்காக தாங்கள் அதனை விட்டிருக்கலாம்.
இப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மோனசைட் இருக்கும் பகுதிகள் எந்த தனியாருக்கும் குத்தகை வழங்கப்படுவது இல்லை. தனியாருக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் குறைந்த அளவு மோனசைட் உள்ள பகுதிகள் ஆகும்.
எனவே எந்த இடத்திலும் கதிர்வீச்சை கக்கும் மோனசைட் குவித்து வைக்கப்படுவதில்லை. மாறாக பாதுகாப்பாக பாதுகாத்து வைத்துள்ளார்கள். திருவம்பலாபுரத்திலும் 23461 மெட்ரிக் டன் வைத்திருப்பதாக நிறுவனம் சொல்ல ஆனால் 23608 மெட்ரிக் டன் மோனசைட் இருப்பதாக அதிகாரிகள் கண்டுபிடித்தால் நிறுவனம் தவறு செய்யவில்லை என்று தானே அர்த்தம். அதனை நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாமே..
மத்திய அணுசக்தி துறை அதிகாரிகள் உங்களிடம் கூறினார்கள் என கூறி உள்ளீர்களே.. அவர்கள் இந்த மோனசைட் இருப்பு வைக்கும் போது கதிர்வீச்சு வராமல் இருக்க மேலே இரண்டு மீட்டர் கழிவு மணல் கொட்ட வேண்டும் என்ற விதி இருப்பதை அவர்களாக விட்டார்களா அல்;லது நீங்களாக விட்டீர்களா தெரியாது. அவ்வாறு உள்ள கழிவு மணலையும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு எதிராக அறிக்கையில் காட்ட வேண்டும் என்று சில அதிகாரிகளின் வற்புறுத்தலால் காட்டி இருக்கலாம். ஆனால் இது பற்றி சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்யும்.
ஒரு பொறுப்பு உள்ள பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வந்து உள்ள இந்து போன்ற ஒரு பத்திரிக்கை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு இனத்தை கையில் எடுத்து நீதித்துறையை அச்சுறுத்துவதற்கு இவ்வாறு செய்தி வெளியிட்டது வருந்ததக்கதே!!. இந்த செய்தியை வெளியிட இந்தியாவில் உள்ள தலைசிறந்த பத்திரிக்கை ஜாம்பவான் ஆன திரு.ராம் மற்றும் திருமதி மாலினி பார்த்தசாரதி போன்றவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் விந்தையாக உள்ளது.
தயவு செய்து இந்த விளக்கத்தை உங்கள் பத்திரிக்கையில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஆர்.பாலகிருஷ்ணன்
தலைவர்