Tag Archives: Patchamuthu

புதிய தலைமுறை கனிம தொழிலுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்பி வருகிறது என்பதை ஆணிதரமாக வெளிபடுத்தி உள்ளார் தென்மாவட்ட கட்டு மர நாட்டு படகு மீனவர் சங்க தலைவர். இதோ அவர் புதிய தலைமுறைக்கு அனுப்பிய மின் அஞ்சல்

——— Forwarded message ———-
From: Raja Menavar Sangam <rajamenavar@gmail.com>
Date: 2015-02-21 13:54 GMT+05:30
Subject: Motivated False News at Puthiya Thalaimurai
To: news@gennowmedia.com
Cc: president@beachminerals.org, coastalenv.01@gmail.com, sworkersassociation@gmail.com
                                               நாள் : 21.02.2015

பெறுநர்

நிர்வாக ஆசிரியர்,
புதிய தலைமுறை தொலைகாட்சி,
சென்னை.

அன்புடையீர்,

 பரவலாக ஒரு பேச்சு எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் கல்வி கொள்ளையை வெளியே தெரியாமல் மறைப்பதற்காகவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் தான் புதிய தலைமுறை தொலைகாட்சி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு வேலையே உண்மைக்கு புறம்பான செய்திகளை மிகைப்படுத்தி வெளியிட்டு மக்கள் கவனத்தை திசைதிருப்புவது என பேச்சு வந்தது. அது பற்றி ரூபஸ்ரீ (http://ruba442.blogspot.in/) மற்றும் கல்வி கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம் (http://pmaed.org/) ஆகிய இரண்டு இணைய தளங்களிலும் ஏராளமான பதிவுகள் இருந்தன. அரசு அலுவலகங்களின் ஆவணங்களும் இருந்தன. அதனை இது வரை நம்பாமல் இருந்தேன். ஆனால் நேற்று 20.02.2015 “நேர்பட பேசு” தாது மணல் பற்றி உள்ள கலந்துரையாடலை பார்க்;கும் போது எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் ஊழல்களை மறைப்பதற்காக தான் புதிய தலைமுறை தொலைகாட்சி செயல்படுகிறது என்பது நிதர்சனமாக தெரிந்தது.

 திரு.வைகுண்டராஜன் என ஒருவர் பெயரை சொல்லி கூலிக்கு மாறடிக்கும் திரு.இசக்கிமுத்து என்பவர் பேசினார். அவர் கடந்த சட்ட மன்ற தேர்தலில் திரு.வைகுண்டராஜனிடம் கேட்ட தொகை ரூபாய் 50 லட்சம். ஆனால் திரு. வைகுண்டராஜன் கொடுத்து 5 லட்சம். எனவே அந்த கோபத்தில் பேசுகிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

 யாரை திட்ட வேண்டுமோ அவர்களை திட்டுவதற்கு இந்த இசக்கிமுத்து, புதிய தலைமுறை, சன் தொலைகாட்சி, கலைஞர் தொலைகாட்சி ஆகிய 3-க்கும் ஒரு ஊதுகுழலாக பயன்பட்டு வருகிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். எனவே யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 ஆனால் புதிய தலைமுறை நேர்மை தவறி செய்தி வெளியிடுகிறது என்பதை நேற்று அப்பட்டமாக காண்பித்து விட்டது. முகநூலில் உள்ள செய்திகள் என ஸ்குரோலில் ஓட விட்டார்கள். ஆனால் புதிய தலைமுறை முகநூலை எடுத்து பார்த்தால் அதில் உள்ள கமெண்ட்டில் 1) வெற்றிவேல் 2) Ungal Nanban 3) Veera Sankar 4) R R Immanuvel Nadar 5) Nithya Kalyani 6) Selva Sekaran 7) Keep Walking 8) Sakthi Murugan 9) Veera Veera 10) Rajan Raj  மற்றும் பலர் மிகவும் ஆதாரமாக புதிய தலைமுறை உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடுகிறது என்பதை கண்டித்தும் அரசின் நடவடிக்கை சரியாக உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள். இதில் ஒரு செய்தி கூட ஸ்குரோலில் ஓடவில்லை. எனவே அந்த ஸ்கோரோலில் ஓடும் செய்தி அனைத்தும் புதிய தலைமுறை அலுவலகத்தில் சில போலி பெயர்களில் ஊழியர்களால் தயாரித்து ஓட விடப்படுவது என்பது தெளிவாக தெரிகிறது.

 45,000 ரூபாய் மட்டுமே ஆண்டு கட்டணமாக வசூலிக்க வேண்டும் என நிர்ணயித்து உள்ள நிலையில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் எஸ்.ஆர்.எம். நிறுவன கல்லூரிகள் வசூலி;க்கிறது. இது பற்றி புதிய தலைமுறை ஒரு நேர்பட பேசு நிகழ்ச்சி வைக்க வேண்டும். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் பெற வேண்டிய துறைகளில் எந்த அங்கீகாரமும் இல்லை என்பதும் மேற்சொன்ன இணைதளங்களில் தெரிய வருகிறது.

 தீயணைப்பு துறையின் அனுமதி இல்லை என ஜவுளி வியாபாரிகளின் கடைகள் இடிக்கப்படுகின்றன. ஆனால் அதே தீயணைப்பு துறை அனுமதி இல்லாமல் இயங்கும் இந்த கல்வி வியாபாரியின் நிறுவனங்கள் மீது நடவடிக்கை இல்லை. ஆளுக்கு ஒரு நீதியா? இது பற்றியும் பேச வேண்டாமா?

 அதே போல் www.beachminerals.org என்ற இணையதளத்தை பார்வையிட்டால் மத்திய மாநில அரசு அதிகாரிகள், கூட்டு ஆய்வு செய்து புகார்கள் உண்மையல்ல என்பதை அறிக்கை செய்த ஆவணம் உள்ளது. ஆஷிஷ்குமார் கலெக்டர், தயாதேவதாசிடம் வேலை பார்க்கும் திரு.சுந்தரத்தால் தான் பொய் அறிக்கை எழுத வற்புறுத்தப் பட்டார் என்பது வீடியோவாக உள்ளது. திரு.சுந்தரமே காசுவாங்கி வேலை பார்க்கும் நபர் என்பதும் விக்டர் ராஜமாணிக்கமும் தயாதேவதாசிடம் பணியாற்றுபவர் என்பதும் வீடியோவில் உள்ளது.

 முதல்வர் உரையில் தயாதேவதாசின் 39 லட்சம் டன் கனிம கொள்ளை பற்றி பேசியதை தாங்கள் வேண்டும் என்றே இருட்டடிப்பு செய்தீர்களே? இதற்கு எத்தனை கோடி வாங்கினீர்கள்?

 மேற்கண்ட 39 லட்சம் டன் கனிம கொள்ளையை திமுக ஆட்சியில் பாதுகாத்து ஒரு பொய்யான அறிக்கையை கோட்டாட்சியர் மூலம் சமர்பித்தார்கள். அந்த அறிக்கையையும் நான் நேர்பட பேசு நிகழ்ச்சியில் கொண்டு வந்து நிரூபிக்கிறேன். இதனையும் உலக மக்கள் அனைவரும் பார்க்கட்டும்.

அதே போல் பொய் அறிக்கை கொடுத்ததற்காக திரு.ஆஷிஷ்குமார் மீது குற்ற வழக்கு தொடர கொடுக்கப் பட்ட மனு மற்றும் அனைத்து அலுவலர்களிடம் இருந்தும் தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப் பட்ட தகவல்கள் அனைத்தும் அந்த இணையதளத்தில் உள்ளது. எனவே இந்த புகாரே பொய் என்பதற்கு எல்லா ஆவணங்களும் அங்கு உள்ளது. ஆனால் ஒரு தனி நபரை அவருக்கு சந்தர்ப்பமே கொடுக்காமல் தொலைகாட்சியில் பேசுவதற்கு பெயர் தான் நேர்மையா?

நேற்று 20.2.15 அன்று மேலும் மனித உரிமை பாதுகாப்பு இயக்க வழக்கறிஞர் விளக்கம் என ஒன்றை கூறினீர்கள். அவர் மதுரையில் உள்ள இரண்டு வழக்கறிஞர்களோடு திருநெல்வேலியில் முகாமிட்டு வைகுண்டராஜனிடம் பொது நல வழக்கை வாபஸ் வாங்க இரண்டு  கோடி ரூபாய் பணம் கேட்டதும், வைகுண்டராஜன் அவ்வாறு தர முடியாது என மறுத்ததும் இறுதியில் ஒரு கோடி என அவர் இறங்கி வந்ததும் இது பற்றி மற்றவர்களிடம் கலந்து பேசாமல் முடிவு செய்ய முடியாது என வைகுண்டராஜன் கூறியதும் உண்மை. இதனையும் அந்த வழக்கறிஞரையும் வைத்தே உங்கள் தொலைகாட்சியில் விவாதம் நடத்துவோம். தாங்கள் தயாரா?

உயர்நீதிமன்றத்தின் ஒரு இடைக்கால தடை உத்தரவை வைத்து தான் பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்த பச்சமுத்து, தெலுங்கு ஆர்ஜின் என சிறுபான்மை நிறுவனமாக பதிவு பெற்றார். இந்த தகவல்களும்; மேல் அதிக தகவல்களும் இணையதளங்களில் உள்ளதோடு அல்லாமல் அசல் ஆவணங்களை நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் ஆஜர் படுத்துகிறேன். வெளியிட தயாரா என்பதை கூறுங்கள்.

உங்கள் தொலைகாட்சியில் ஒரே நேரத்தில் இந்த கல்வி கொள்ளை பற்றியும், கனிம கொள்ளை பற்றியும் நேர்பட பேசு நிகழ்ச்சி வைப்போமா? தயாதேவதாசிடம் பணம் வாங்கிய உங்கள் காம்பயரும், அதே போல் சந்தியாவும் சாவு வீட்டிற்கும், திருவிழாவிற்கும் போகும் கரகாட்டகாரன் இசக்கி முத்துவும் ஒரு கரையில் இருக்கட்டும். நானும் கல்வி கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இருந்து மேலும் இருவரும் வருகிறோம். நீங்கள் உங்கள் தரப்பு ஆவணங்களை காட்டுங்கள். நாங்கள் எங்கள் தரப்பு ஆவணங்களை காட்டுகிறோம். எதனையும் எடிட் செய்யாமல் அப்படியே உலக மக்கள் அனைவரும் பார்க்கும் படி வெளியிடுவோம். தங்கள் தொலைகாட்சி தயாரா?

என்று நேர்பட பேசு வைக்கலாம் என்பதை கூறுங்கள். நாங்களே தமிழகம் முழுவதும் பத்திரிக்கைகள் மூலம் அந்த நேரத்தை வெளியிடுகிறோம். எங்களுக்கு தேவை கல்வி கொள்ளை, கனிம கொள்ளை இரண்டையும் ஒரே நேரத்தில் பேசி எது உண்மை, எது பொய் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து வெளியிடுங்கள்.

இப்படிக்கு
 
 

M. Raja

President,

Southern District Kattumara Nattu Padaku Fisherman Association,

Idinthakarai,

Radhapuram Taluk,

Tirunelveli District, Tamilnadu, India.

Mobile No :  91 9444271595