சுரங்கங்களில் பைப் லைன் வெடி என தொடர்ச்சியாக பல நூறு மீட்டர் நீளத்திற்கு வெடி வைத்து தகர்க்கும் முறை உள்ளது. இதில் பூமி அதிரும். சுற்றுச்சூழல் மாசுபடும். ஒலி மாசு, காற்று மாசு ஏற்படும். ஆனால் தாது மணல் சுரங்க பணிக்கு இம்மாதிரி கேடான எந்த தேவையும் இல்லை.
Category Archives: Blog
VSEZ, DC appreciate TGI
Transworld Garnet India Pvt Ltd, VSEZ Unit help to control the fire accident cost in another unit. To this effect VSEZ, Development Commissioner appreciate and send appreciation letter.
தமிழகத்தை முந்துகிறது கேரளா
அகில இந்திய அளவில் தாது மணல் உற்பத்தியில் தமிழகம் தான் முதலிடம் பெற்றது. தமிழகத்தில் 50,000 நபர்களுக்கு மேல் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு தரும் தாது மணல் தொழிலை நிறுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் அண்டை மாநிலமான கேரளா மத்திய அரசின் Geological Survey Department -க்கு அழுத்தம் கொடுத்து கேரளாவில் உள்ள தாது மணல் இருப்பு விபரங்களை ஆய்வு செய்து அறிக்கை தர வற்புறுத்தி அனுமதியும் பெற்றது. இதில் முக்கியம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முன்னேற்ற ஆய்வு கூட்டமும் நடத்தி வருகிறது. தமிழக அரசு பல ஆண்டு காலமாக ஆற்றுமணல் மட்டும் போதும் தங்கள் வருவாய்க்கு என வாழா இருந்ததன் விளைவு 50,000 தொழிலாளர்கள் பணி இழப்பு, மாநில அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி இழப்பு சுமார் 780 கோடி ரூபாய். இந்த விபரங்களை மாண்புமிகு தமிழக முதல்வரிடமும் நிதித்துறை அமைச்சரிடமும் திட்டமிட்டு மறைத்த அதிகாரிகள் பற்றி என்ன சொல்ல..!
தாதுமணல் தொழிலை ஊடகங்கள் தான் கெடுத்து வருகிறது என கேரளா சபாநாயகர் பேசிய செய்தியும் தற்போது சிந்திக்க வேண்டியதே.. இணைப்பு கீழே.
ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவின் கனிம இருப்பு ஆய்வறிக்கை
ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா, இந்தியா முழுவதும் உள்ள சில கனிமங்கள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அது பொது மக்கள் மற்றும் உறுப்பினர்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசின் வெள்ளை அறிக்கை
தமிழக அரசு மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த வெள்ளை அறிக்கையில் கண்ட கீழ்கண்ட படங்கள் முக்கியமானது. இதனை பார்த்தால் 2013 முதல் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகி வருவதை காணலாம். தவறான பொய்யான புகார்களால் தாது மணல் சுரங்க பணி நிறுத்தப் பட்டு ஒரே நேரத்தில் 50,000 தொழிலாளர்கள் பணி இழந்தது இதே 2013-ம் ஆண்டு தான். இதுவே மாநிலத்தின் நிதி நிலை மோசமாவதற்கு தாது மணல் சுரங்க பணி நிறுத்தம் ஒரு காரணம் என்பதை நிரூபிக்கும். அதே பட்டியலை பார்வையிட்டு வரும் போது 2019 முதல் 2021 வரை உள்ள கால கட்டத்தில் நிதி நிலை மிக மிக மோசம் அடைந்து உள்ளது. 2019-ல் தான் மத்திய அரசு தவறான அறிவுரையால் இந்தியா முழுவதும் உள்ள சுமார் 24 சதவீத சுரங்க குத்தகைகளை ஒரே நேரத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள 328 பெருங்கனிம சுரங்க குத்தகைகளில் 72 சுரங்க குத்தகைகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதில் 64 சுரங்க குத்தகைகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இப்போது புரிந்து இருக்கும். தமிழகம் நிதி நிலையில் இவ்வளவு மோசம் ஆவதற்கு என்ன காரணம் என்பது. அப்போதைய தமிழக தொழிற்துறை மந்திரி தன் சொந்த பகைக்காக மாநில அரசை கலந்து பேசாமல் மத்திய அரசு சுரங்க குத்தகைகளை ரத்து செய்தது தவறு என மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. ஆனால் தற்போதைய அரசு நிதிநிலையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இந்த நடவடிக்கையும் எடுக்கும் என நம்புவோம். தமிழக அரசை கலந்து பேசாமல் தமிழகத்தின் கருத்தை குறிப்பிட்டு கேட்காமல் தமிழகத்தில் உள்ள சுமார் 64 சுரங்க குத்தகைகளை மத்திய அரசு ரத்து செய்தது தவறு. அந்த ரத்து உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு சுரங்கத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும். மேற்கண்ட 64 சுரங்க குத்தகைகளும் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதோடு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் அளவிற்கு தாது மணல் சுரங்கம் செய்து ஏற்றுமதி செய்யும். இதில் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி. 10 சதவீதம் மத்திய அரசுக்கு மட்டும் சொந்தமான ஏற்றுமதி வரி. எனவே ஆண்டுக்கு 1400 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி இழப்பீடும், 500 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு ஏற்றுமதி வரி இழப்பீடும் மற்றும் மாநில அரசுக்கான 3 சதவீத ராயல்டி மற்றும் அதன் மீதான வரி வகையில் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் மாநில அரசுக்கு நட்டம்.
50000 தொழிலாளர்களும் குறைந்த பட்சம் ரூபாய் 10000-த்தில் இருந்து அதிக பட்சம் ரூபாய் 30,000 வரை சம்பளம் பெறுபவர்கள். இந்த 50000 தொழிலாளர்களும் அவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை குடும்ப வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள், துணி, கல்வி செலவு போன்ற செலவுகளுக்கு செலவிடுவதன் மூலமும், ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி கிடைக்கும். இதனை வைத்து உபதொழில் மூலம் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயும் மற்றும் இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறுபவர்களும் இதில் பாதிக்கப் பட்டு விட்டார்கள். எனவே மாநில அரசின் இந்த நிதி சுமை மோசமாவதற்கு முந்தைய மாநில அரசு மட்டும் அல்ல. தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கையும் ஒரு காரணி.
எனவே ஒட்டு மொத்தமாக 50000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழக அரசின் நிதி நிலையை சரி செய்யவும், சரியான அலுவலர்களை மாநில அரசு உரிய இடத்தில் நியமித்து இந்த தொழிலை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.
மத்திய அரசின் தவறான உத்தரவால் 1994-ல் இருந்து இந்தியாவில் தாது மணல் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது 3-வது இடத்திற்கு சென்று விட்டது. உலக அளவில் தாது மணல் உற்பத்தியில் முதல் இடம் வகித்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு சென்று விட்டது. இது எல்லாம் திறமை இல்லாத அதிகாரிகளை முக்கியமான பணியிடங்களில் பணி அமர்த்தியது தான் காரணம் என்றால் அதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அதிர்ஷ்ட வசமாக தமிழ்நாட்டிற்கு பிரதிபலன் எதிர்பாராத ஒரு நிதி அமைச்சர் கிடைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இம்மாதிரியான நிதி நெருக்கடியில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் நல்ல நிதியமைச்சரை நியமிக்க வேண்டும் என்பதை தெரிந்து நியமித்து உள்ளார். எனவே தாதுமணல் தொழிலாளர்களின் எதிர் காலத்தை நிதியமைச்சர் கவனத்தில் கொள்வார் என நம்புவோம்.
Implementing ‘MAKE IN INDIA’ Scheme in Rare Earths Production will make India No.1 among the world
In January and February alone, China exported 3,500 tons of Rare Earth Elements. Japan imports 32 percent of its demand and the United States imports 38 percent from China. Similarly, Korea, Russia, Taiwan, Thailand and Indonesia also import Rare Earth Element from China.
China exports at least Rs. 1,500 crore worth of these Rare Earth Elements annually to other countries.
In India, since only Government Company IREL alone engaged in Production of Rare Earths, it could not compete with China, and w.e.f. 2004 IREL have stopped the Rare Earths Production. They have produced only 5 tonnes in 3 years. India, which has 35 per cent of the world’s Rare Earths Reserves, will implement the Make in India Programme to increase Rear Earth Production in order to Earn Foreign Exchange and meantime to become self-sufficient in Nuclear Fuel. This will make India No.1 Rare Earth Producer and Exporter among the world.
Will the Prime Minister implement the Make in India Programme in Rare Earths Production?
Complaint to Honourable Prime Minister to take action against D.Dhayadevadas for making false complaints with forgery Federation
D. Dhayadevadas registered a company in the name of Federation of Indian Placer Mineral Industries and make false complaints against officials and other mining lessees. No University grant conferred “Doctorate” to Mr. D.Dhayadevadas. Simply paying a small amount to one association, he get doctorate in the name of that he had made lot of researches in the Holy Bible. For making false complaints, today we send complaint with attachments to the Honourable Prime Minister for taking action.
The Prime Minister office allotted the Registration Number to our complaint.
The complaint is attached for our members information and feed back.
இந்திய சுரங்க தொழிலின் பரிதாப நிலை
இந்தியாவின் வேலை வாய்ப்பில் சுமார் 23 சதவீதம் சுரங்க தொழில் மூலம் கிடைக்கிறது. நீர், காற்று, உண்ணும் உணவு மரம் மற்றும் மரத்தால் ஆன பொருட்கள் தவிர அனைத்தும் சுரங்கம் செய்யப்படும் கனிமங்களில் இருந்தே தயாரிக்கப் படுகிறது. இதுவே சுரங்க தொழில் மற்றும் கனிமங்கள் மனித வாழ்க்கைக்கு எவ்வளவு அத்தியாவசியம் என்பதை நிரூபிக்கும். மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சி தான் கனிம தொழில் விரிவடைவதற்கு காரணம். அரசுக்கு ஏராளமான வருவாயையும், அன்னிய செலவாணியையும், இந்தியாவில் வேலை வாய்ப்பையும் ஏராளமான தொழிலுக்கு மூலப்பொருளையும் சப்ளை செய்யும் கனிம தொழில் கடந்த சில வருடங்களாகவே தவறான கொள்கையால் பாதிக்கப் பட்டு வருகிறது. இதனை பலமுறை நாம் பதிவு செய்துள்ளோம். தற்போது கற்று உணர்ந்த அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில் இதனை உறுதி செய்துள்ளார்கள். முன்பு கடைபிடிக்கப் பட்ட நடைமுறைக்கும், தற்போது ஏல நடைமுறை என அரசு சட்டத்தை மாற்றியதற்கும் இடையில்; உள்ள வேறுபாடுகளை இந்த கருத்தரங்கு ஆராய்ந்தது.
ஏலம் மூலம் சுரங்க குத்தகை வழங்கப் படும் என 2015-ல் சட்ட திருத்தம் கொண்டு வந்த பிறகு கடந்த ஐந்து வருடங்களில் இந்தியா முழுவதும் சேர்ந்து 103 சுரங்க குத்தகைகள் மட்டுமே ஏலம் விடப் பட்டுள்ளது என்ற விபரத்தை இந்த கருத்தரங்கு வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளது.
ஆனால் 2006 முதல் 2010 வரை மட்டும் 2675 குத்தகைகளும்; 2010-2014 வரை 494 குத்தகைளும், அதே நேரம் 2015-2021 வரை வெறும் 28 சுரங்க குத்தகைகள் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளது.
மத்திய அரசின் கொள்கையை பின்பற்றி சிறு கனிமங்களுக்கும் ஏலம் என்ற நடைமுறையை துரதிஷ்டவசமாக கர்னாடகா அரசும் பின்பற்றியது. 2016 முதல் நாளது தேதி வரை ஒரு சிறு கனிம உரிமமும் வழங்கப் படவில்லை. அப்படியானால் வீடு கட்டுபவர்களுக்கு கல்லும் மணலும் எங்கு இருந்து வருகிறது. அரசுக்கு வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக எடுக்கப் படுகிறது. இது தான் அரசின் புதிய சுரங்க கொள்கையின் வெளிப்பாடு.
2017-18-ல் இருந்தே இந்தியாவின் கனிம உற்பத்தி குறைந்து வருகிறது. விளைவு இந்திய தொழில்களுக்கு மூலப் பொருட்கள் இந்தியாவில் இருந்தாலும் கூட அன்னிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரசுக்கு அன்னிய செலவாணி இழப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணி.
பொருளாதார வளர்ச்சிக்கு கனிமங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஏராளமான நாடுகள் சுரங்க குத்தகைக்கு ஏல முறையை அறிமுகப் படுத்தவில்லை. உலகில் உள்ள நாடுகளில் இந்தியா உட்பட ஏழு நாடுகள் மட்டுமே இந்த ஏல முறையை கடைபிடிக்கின்றன. ஒரு சுரங்க குத்தகை வழங்கப் பட்டால் குறைந்த பட்சம் 100 நபர்கள் நேரடியாகவும் 1000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். அப்படியானால் எத்தனை நபர்களின் வேலை வாய்ப்பு அரசின் தவறான கொள்கையால் பாதிக்கப் பட்டு உள்ளது என்பதை இதன் மூலம் தெரியலாம்.
நாம் கண்கூடாக தெரிவதற்கு ஒரு சிறு உதாரணம். உலக தாதுமணல் இருப்பில் 3-ல் ஒரு பங்கை தன்னகத்தே கொண்டு உள்ள இந்தியா சில தவறான நபர்களின் வழிகாட்டுதலால் தாதுமணல் சுரங்க பணியை நிறுத்தி விட்டு தற்போது இந்தியாவில் உள்ள டைட்டானியம் உற்பத்தியாளர்களும் தங்கள் மூலப் பொருளுக்கு அந்நிய தேசத்தை சார்ந்து இருக்கும் நிலை உள்ளது. இவ்வாறு இந்திய தொழிலை முடக்கி அன்னிய தொழிலை ஊக்குவிக்க அன்னிய சக்திகளின் ஊடுறுவல் எல்லா மட்டத்திலும் உள்ளது என்பதை முதன் முதலில் வெளி கொணர்ந்தது நமது சங்கமே.
After 16 years, mineral exploration starts at the Kolar Gold Fields
The Union Minister said the exploration started after his meeting last month with Karnataka Chief Minister B S Yediyurappa on August 28
Bengaluru Last Updated at September 28, 2020 23:29 IST
: The Mineral Exploration
Corporation Limited (MECL) started exploration of the Kolar Gold Fields (KGF) on Monday, said Union Minister for Coal and Mines Pralhad Joshi.
“Happy to convey that exploratory drilling at Betrayaswamy block of Kolar Gold Fields commenced today, ” the Union Minister tweeted.
Sharing photographs on Twitter on the commencement of the activities, Joshi said the mining would help resolve Bharat Gold Mines Limited (BGML) issue over exploration in KGF that has been pending for the last 16 years.
The Union Minister said the exploration started after his meeting last month with Karnataka Chief Minister B S Yediyurappa on August 28.
He said he had directed MECL to carry out immediate exploration in the mining lease area of BGML after the meeting.
In the meeting, Yediyurappa and Joshi decided that either the high-value minerals at BGML are explored or handed over to the Industries Department to set up an industrial cluster to start large-scale economic activities there.
Salient features of “The Occupational Safety, Health and Working Conditions Code 2020″
Govt., of India introduced New Code instead of Mines Act and other Act and Rules in the name of “The Occupational Safety, Health and Working Conditions Code 2020 which is available in our blog. The salient futures of the said code is given below.Major Amendements in OSH and working conditions code 2020, (1)











