மத்திய தொழிலாளர் துறை தாது மணல் விவகாரத்தில் தலையிட்டு தொழிலாளர்களின் பணி பாதுகாப்பையும் அவர்களது எதிர்காலத்தையும் உறுதி செய்ய வேண்டும். இது தான் அனைத்து தொழிலாளர்களின் விருப்பம்.
தாது மணல் தொழிலால் உலகம் அழிகிறது என சில ஊடகங்கள் வாங்கிய காசுக்கு வரிந்து கட்டி எழுதினார்கள். ஆனால் அதே ஊடகங்கள் தற்போது மத்திய மாநில அரசுகள் கூட்டாக சேர்ந்து இணைத்துறையில் ஆண்டுக்கு 5000 கோடி ஈட்டும் என எழுதுகிறார்கள். வரவேற்கத்தக்க விசயமே. ஆனால் ஏற்கனவே இந்த தொழிலில் உள்ள தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது பற்றி எந்த ஊடகமும் எழுதவில்லை. தாது மணல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும். மத்திய தொழிலாளர் ஆணையர் இதில் தலையிட்டு தொழிலாளர்களின் பணி பாதுகாப்பையும் அவர்களது எதிர் காலத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஊடகங்கள் காசுக்கு விலை போன நிலையில் தொழிலாளர்களின் நலனை காக்க நமது சங்கமே நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் மனுக்களை பெற்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கும் மற்றும் மத்திய தலைமை தொழிலாளர் ஆணையருக்கும் அனுப்பி வைத்துள்ளது. விரைவில் மத்திய தொழிலாளர் நலத்துறை இது பற்றி ஒரு நல்ல முடிவை அறிவிக்கும் என எதிர் பார்க்கிறோம்.